ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Saturday 23 July 2016

திருமுறையை உணர்ந்து படி


        
 ஒரு பதிவில் #திருமுறையை_உணர்ந்து_படி_!! என்று கூறியுள்ளிர்கள் எப்படி படிப்பது என்று கூறவும் ?? என்ற கேட்ட இளம்அடியார் ஒருவருக்கு பதிலே இப்பதிவு !!!

நமசிவாய
திருமுறை நாயகன் திருவடி போற்றி

திருமுறை யாது ?
சிவத்தால் ஆட்கொள்ளப்பட்டு அகமும் புறமுமாய் அவன் திருவருளை அனுபவித்து, அந்த அனுபவத்திலேயே தன்னை இழந்து சிவமாக ஆகிய அருளாளர்கள், தம் உணர்ந்ததை தான்பெற்ற சிவானுபவத்தை அனைவரும் பெறவேண்டி அருளிய பாடல்களே !! திருமுறைகள்,
திருமுறைகள் தமிழ் என்றாலும்கூட புரியவில்லை ??
ஆம் இன்றைய காலகட்டத்தில் நம் பேசும் தமிழில் வடமொழி - ஆங்கிலம் - வாழும் ஊருக்கான சில வார்த்தைகள், என்று கலந்துள்ளது,
அதில் பழக்கப்பட்டு போன நமக்கு, அன்றைய சங்கத்தமிழ் புரியாதுதான் !!
அது உனக்கு புரியவேண்டும் !!!, அதன்மூலம் உன்னுள் உள்ள அனைத்துமானவன் உனக்கு புலப்பட வேண்டும் !!!, என்று உனக்கானவன் கருதியதால் தான் !!, திருமுறைகள் படிக்கவேண்டும் என்ற எண்ணமும் !!! அதற்காக இப்பதரை கொண்டு இப்பதிவும் !!!
சரி எப்படி பொருள் உணர்ந்து படிப்பது ?? அதன்மூலம் சிவத்தை அனுபவிப்பது எவ்வாறு ??
திருமுறைகள் மூலம் தன்னை உன்னுள் உணர்த்தி, நடக்கும் நிகழ்வுகளில் அவர் கருணையை உனக்கு உணர்த்தி, உன் உயிருக்கு உரியவனை, பலபிறவியில் உணரப்படாதவனை, இப்பிறவியில் அடையவே !!
திருமுறை பாடல்களை பாடவிட்டு அதனுடன், திருமுறை பாடல்கள் கொண்ட புத்தகம் கொண்டு வாசிக்க தொடங்குங்கள், இது முதல்நிலை,
நித்தம் மேல்கூறிய வண்ணம் செய்யச்செய்ய உங்களுக்குள் ஒரு மற்றம் நிகழ்வதை சர்வநிச்சியமாக உணர்விர்கள், இது இரண்டாம் நிலை,
அடுத்தடுத்து அப்பாடல்களை கேட்க்ககேட்க அந்த பாடல் வரிகளின் பொருளை உனக்கானவன் உணர்த்துவான், இது முன்றாம் நிலை,
பொருளை உணர்த்தும்போதே தன்னையும் உங்களுக்குள்ளே உணர்த்துவான்,
( எப்படி என்றால் - " தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி " - என்ற பாடல் வரிகளை கேட்கும்போது நமது மனக்கண்ணில் அழகிய தோடு அணிந்த காதுகள் உடைய, தூய வெண்ணிற பிறை சந்திரனை தான் தாழ்சடைமீது சூடிய சிவபெருமான் தோன்றுவார் )
அப்படி அனுபவித்து பாடி அவனுடன் உருகி கண்ணீர் வரும்,
இந்த அனுபவத்தை சிவனுபவமாக பெறலாம்,
எனக்கு திருமுறைகளில் எத்தனை பதிகங்கள் தெரியும் என்பது முக்கியம் இல்லை !!
ஒரு பாடலில் உள்ள நான்கு வரி தெரிந்தால்கூட போதும் அதை உணர்ந்து அப்பாடலில் சிவத்தை அனுபவித்து பாடவேண்டும் !!
மேல்கூறிய யாவும் சிவனருளால் அடியேன் பெற்ற அனுபவமே !!
இதுவே சிறந்தமுறை என்று சொல்லவில்லை !!!!!!!
இதுவும் ஒரு முறை என்று கருதியதன் விளைவே இப்பதிவு !!!
யாருக்கு என்று தீர்மானித்து !!! எம்மை கொண்டு பதிவிட வைத்த ஈசன் திருவருளுக்கு நன்றி !!
திருச்சிற்றம்பலம்

அனுபவிக்க அலுக்காதவன்                            நன்றி முகநூல்
திருவருளால்
அடியேன்
அங்கமுத்து குமார்

Friday 22 July 2016

நவபாஷாணம்


             
 
பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள் . வீரம் , பூரம் , ரஸம் , ஜாதிலிங்கம் , கந்தகம் , கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம் , மிருதார்சிங் , சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள் . இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும் , மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து , 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது . இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி , 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது .
அந்த பாஷாணக் கலவையில் லிங்கம் , செந்தூரம் , பாதரசம் , ரச கற்பூரம் , வெடி உப்பு , பாறையுப்பு, சவுட்டுப்பு , வாலையுப்பு , எருக்கம்பால் , கள்ளிப்பால் , வெண்காரம் , சங்குப்பொடி , கல்நார் , பூநீர், கந்தகம் , சிப்பி , பவளம் , சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம் , குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன .
இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது ! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை . அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது . அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் !
பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் . அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள் . மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை , ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும் , அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது . முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர் .
மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர் . ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை ! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான் !

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!

Thursday 14 July 2016

வீபூதி - மூன்று கோடுகளின் மகிமை

                                 
   
ஓம் நமசிவாய                                       திருசிற்றம்பலம்


முதல் கோடு ......
அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு .......
உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு ........
மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.

Wednesday 13 July 2016

மனம்.



       

நமக்குள் இருக்கும் அற்புத ஆற்றல்களை அடைய முடியாமல் தடுக்கும் சுவர்தான் மனம். ஐயா நான் கேட்டது நீங்க நம்பறீங்களா என்றுதானே ஒழிய அழிய போவதாக நான் சொல்லவில்லை. இந்த உலகம் நிச்சயம் சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு பிறகுதான் அழியும். சில விடயங்களை நாம் நேரடியாக உங்களுக்கு கூற இயலாது. சில இரகசியங்களை தாங்கும் மனோதிடம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்னும் உங்களின் பல லட்சம் தலைமுறை இப்பிரபஞ்சத்தில் வாழும் இது சத்தியம். 

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய கிரகங்கள் மெல்ல மெல்ல சூரியனை நோக்கி ஈர்க்கபட்டு சூரியனால் விழுங்கபடும். இது நடக்க சுமார் 400 கோடி ஆண்டுகள் ஆகும். ஆனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் மனிதன் வேறு கிரகத்து குடிபெயர்ந்து விடுவான். கிரகம் விட்டு கிரகம் தாவி மனிதன் தன் இனத்தை காப்பாற்றி கொள்வான்.
 
உண்ணும்போது உயிரெழுத்தை உயரவாங்கு
உறங்குகின்ற போதெல்லாம் அதிவேயாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும்போதும் அதுவே ஐயா.

இடங்கலை- மின்புலம்
பிங்கலை- காந்தபுலம்
சுழிமுனை- மின்காந்த சக்தி

சுழிமுனை மூச்சென்பது நெற்றியில் இருநாடிகளும் சிறு துடிப்புகளாக தெரிவதே.

மேஜிக் என்பது அதிவேக அசைவுகளினால் திறம்பட செய்வது. அதாவது குறிப்பட்ட வேகத்தை மட்டுமே கண்களால் பார்க்க முடியும். அதிவேக செயல்பாடு மூளையால் கணிக்க முடியாதது.  நாம் தொடர்ந்து மூச்சையே கவனிக்கும் போது ஒருகட்டத்தில் சுவாசம் நின்று சுழிமுனையில் நுண்ணிய துடிப்புகளாக மாறும். இது ஆரம்பத்தில் ஒரு நொடி பிறகு 2 3 4 என அதிகரித்து கொண்டே செல்லும். அந்த கால இடைவெளிதான் நிர்விகல்ப சமாதி.

கீரைக்கு இணையான சத்துக்கள் எந்த அசைவத்திலும் இல்லை. புலால் உண்பதால் இரைப்பைக்கு உணவு சென்ற பின்னும் பாக்டீரியாக்கள் பெருகி ரத்தத்தில் கலந்து மனதில் ஆக்ரோஷ எண்ணங்களை தூண்டுகிறது.

ஏன்சியன்ட் ஏலியன்ஸ் நிகழ்ச்சியை நன்கு கவனித்தால் அவர்கள் எதையும் முடிவாக சொல்லாததை கவனிக்கலாம். ஆனால் நானும் அதனை மறுக்கவில்லை. பிரபஞ்சம் பிரமாண்டமானது. வேற்று கிரகங்களில் உயிரணங்கள் வாழ ஏராமான சூழ்நிலைகள் உள்ளது. முடிவில்லா பிரபஞ்சம் என சொல்வது தவறு. அதற்கும் எல்லை உண்டு. ஆனால் அது நொடிக்கு நொடி விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தீப ஒளி தியானம், தொடர்ந்து கண்சிமிட்டாமல் தீப ஒளியை பார்த்துவிட்டு மெல்ல கண் மூடினால் உள்ளே அந்த பிம்பம் சிறிது நேரம் தெரியும். 
முடிந்தளவு அதையே பார்க்க முயலுங்கள். சில நொடிகளில் அந்த ஒளி பக்கவாட்டில் சென்று மறைந்துவிடும். மீண்டும் கண்ணை திறந்து தீபத்தை பாருங்கள். மறுபடியும் கண்ணை மூடி வழக்கம்போல செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர மனக்கண்ணில் ஒளி தெரியும் அந்த கால இடைவெளி அதிகரிக்கும்.

 அந்த கால இடைவெளிதான் மன ஒருமைபட்ட நிலை. சாமி ஆடுவது என்பது வேகமாக குண்டலினி ஏறி இறங்கும் ஒரு செயல்பாடு. நாம் மிகவும் உணர்ச்சி வசப்படும்போது நம்மை அறியாமல் குண்டலினி வேலையை காட்டும். அதை அணுவளவும் எதிர்பார்காத உடலும் மனமும் பயந்து ஆடத் தொடங்குகிறோம். ஆனால் யோகிகள் இதை தானாக ஏற்றுவதால் பயம் இல்லாமல் அதை எதிர்கொள்வர். பேயை அதிகம் நம்புவது பெண்கள்தானே! அதனால் அவர்கள் பேயின் அலைவரிசையில் தொடர்பு கொள்ள முடிகிறது. நீங்களும் நம்பிபாருங்கள் பிறகு தெரியும்.
பிரபஞ்சத்தில் பதிந்த நமது எண்ணங்களை தொடர்பு கொள்ளும் மீடியம் தான் மூளை. அந்த எண்ணங்களின் வலிமையால் வேறு ஒருவரின் மூளையை கூட மீடியமாக தேர்ந்தெடுக்க முடியும். அதுதான் கூடுவிட்டு கூடு பாய்தல். பத்து நாட்களாக மருத்துவமனையில் படுத்துகிடந்தவர் எழுந்து சாமி அழைப்பதாக சொல்விட்டு சாக காரணம் அவருக்கு கருப்புசாமி என்கிற உருவத்தின்மீது அதீத நம்பிக்கை இருந்ததால் அவரது ஆழ்மனம் அவர் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தது. அவரின் இன்றே இறந்து விடுவோம் என்ற ஆழ்மன நம்பிக்கைதான் அவரை கொன்றது. 

நம் மூளையின் ஒரு பகுதி உணர்ந்த்தை சில மைக்ரோ வினாடிக்கு பிறகுதான் நினைவு மனம் உணர்கிறது. இந்த கால இடைவெளிதான் ஏற்கனவே நடந்ததாக சந்தேகிக்க வைக்கிறது. மூளை என்பது மீடியம். மனம் என்பது பிரபஞ்ச அணுக்களில் பதிந்திருக்கும் நம் எண்ணங்கள். மூளை என்கிற மீடியம் மனதை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி நிலை…